மின் வாக்களிப்பு முறையை நன்கு ஆராய வேண்டியுள்ளது- பிகேஆர் தலைவர்

பிகேஆர்  கட்சித்   தேர்தல்களில்  முதல்முறையாக   மின்  வாக்களிப்பு  முறையை   அமல்படுத்துமுன்னர்   அதை   விரிவாக    அலசி  ஆராய    வேண்டியுள்ளது.

அம்முறை   வாக்களிப்பைத்   துரிதப்படும்    என்றாலும்   அகலக்  கற்றைப்  பிணைய   வசதிகளில்   உள்ள   சிக்கல்களையும்  கருத்தில்  கொள்ள  வேண்டும்  என   பேராக்  பிகேஆர்   தலைவர்  முகம்மட்  நூர்   மனுட்டி  கூறினார்.

“சில  இடங்களில்   அந்த  வசதி   உண்டு.  சில  இடங்களில்   அது   கிடையாது.  எனவே,  இதைக்   கருத்தில்  கொள்ள   வேண்டும்”,   என்றாரவர்.

நேற்று  பிகேஆர்   தலைமைச்  செயலாளர்  சைபுடின்   நசுத்தியோன்,  நாடு  முழுவதும்   உள்ள   கட்சியின்  800,000  உற்ஃபுப்பினர்களும்   பங்குபெறும்   மின்  வாக்களிப்பு   முறை  சீராக    நடைபெறுவதை   உறுதிப்படுத்திக்கொள்ள   சோதனகள்   நடைபெற்று  வருவதாகக்  கூறினார்.