புலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..

விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும், புலிகளின் அனைத்து விமானிகளும் எம்மிடம் சரணடையாது நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் : புலித் தலைவர்கள் தப்பிச் சென்றுள்ளனரா?

கோட்டா: ஆம். புலித் தலைவர்கள் பலர் தப்பிச் சென்றுள்ளனர். புலிகளிடம் விமானப் படை பிரிவு இருந்தது. விமானிகளும் அவர்களிடம் இருந்தனர். எமது இராணுவம் எத்தனை புலி விமானிகளை பிடித்தது. ஒருவரைக் கூட பிடிக்க முடியாமல் போய்விட்டது. பிரபாகரனுடன் பல விமானிகள் புகைப்படம் எடுத்திருந்தனர். அது பிரபலமான புகைப்படமாகும். அவர்கள் இன்று வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரை கூட எம்மால் பிடிக்க முடியவில்லை. இவ்வாறு நேரடியாக கூறியுள்ளார் கோட்டபாய.

இதேபோல பல புலிகளின் தலைவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை தொடர்ந்தும் நாம் தேடி வருகிறோம். அவர்கள் எந்த நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதனை நாம் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கோட்டபாய தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: