27 அகதிகள் தாய் நாட்டை வந்தடைந்தனர்

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, பயந்து  நாட்டை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துச் சென்று, அங்கு முகாம்களில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்திய, இலங்கை அகதிகள் 27 பேர், இன்று (07), தாய் நாட்டை  வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இந்தியாவிலிருந்து, மூன்று விமானங்களின் மூலம் இலங்கையை வந்தடைந்தனர்.

திருச்சி, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் தஞ்மடைந்திருந்த அகதிகளே, இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அகதிகளை, விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகள் மற்றும் அகதிகளிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்காக இரகசிய தகவல் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையகம் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் ஒத்துழைப்பினால் இவர்கள்  இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

-tamilmirror.lk

TAGS: