தமிழரின் பாரம்பரிய தாயகமான முல்லைத்தீவில் புத்தர் சிலை அமைக்க வந்த பிக்குகள் குழு இளைஞர்களால் விரட்டியடிப்பு

தமிழரின் பாரம்பரிய தாயகமான முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தங்கியிருக்கும் ஏற்பாட்டுடன் மூன்று வாகனங்களில் புத்தர் சிலைவைக்க வந்த பிக்குகள் குழு பிரதேச இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் .

தமிழர்பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி பௌத்த மதத்தினை பரப்பி தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர் .ஆனால் இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

-eelamnews.co.uk

TAGS: