ரிஷாட் வெளிநாட்டில்; வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை!

மன்னார் – தாராபுரம் துர்கி நகர் பகுதியிலுள்ள வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று பகல் சோதனை செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துவருகின்றார். கடந்த வாரம் அவர் மஸ்கட் நகரிற்கு விஜயம் மேற்கொண்டார்.

நாட்டில் இல்லாத சமயம்பார்த்து அமைச்சர் பதியூதீனின் இல்லத்தை முப்படையினருடன் இணைந்து பொலிஸாரும் சோதனையிட்டிருக்கின்றனர்.

இந்த சோதனையின்போது எந்தவித சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அந்த வீட்டின் வளாகத்திலிந்து கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-athirvu.in

TAGS: