ஒவ்வொரு நாளும் கந்தசாமி கரீம் பாய் ஆக மாறும் நிலை: கதை அல்ல நிஜம்..

கந்தசாமி அண்ணை பீட்டராக மாறுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதே கந்தசாமி அண்ணை “கரீம் பாய்” ஆக ஏன் மதம் மாறவேண்டும் ? ஆம் இது கதை அல்ல நிஜம். 21ம் திகதி நடந்த குண்டு தாக்குதலுக்கு பின்னர், தமிழர்கள் மத்தியில் திடீர் விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் சிங்களவர் தான் எதிரி என்று நினைத்துக்கொண்டு இருந்த ஈழத் தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய விடையம் 21ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புகள். இதனை தொடர்ந்து சில விடையங்களை ஆராய முற்பட்டவேளை. அதிர்வின் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்த விடையங்களில் ஒன்று தான் இது.

வீரகேசரி பேப்பரில் வரும் விளம்பரங்கள். இதில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 பேராவது தமது பெயரை மாற்றி வருகிறார்கள். இலங்கையை பொறுத்தவரை பெயர் மாற்றுவது என்றால் அதனை சட்டமுறைப்படி செய்யவேண்டும் என்றால், நீங்கள் பெயர் மாற்றிய விடையத்தை விளம்பரம் செய்ய வேண்டும். எனவே பெயர் மாற்றிக் கொண்டவர்கள் பொதுவாக இதனை வீரகேசரியில் விளம்பரமாக போடுகிறார்கள். அதில் எந்த ஒரு முஸ்லீம்களும் சைவ மதத்திற்கு மாறி, அல்லது புத்த மதத்தை தழுவியதோ இல்லை. அப்படியான விளம்பரங்கள் எதனையும் காண முடியாது. ஆனால்..

ஆனால் பல தமிழர்கள் முஸ்லீம்களாக மாறி வருகிறார்கள் என்பது தான் தற்போதைய திடுக்கிடும் தகவல். ஆம் கந்தசாமி கரீம் பாய் ஆக ஏன் மாறுகிறார் என்பது உங்கள் மனதில் எழும் பெரும் கேள்வியாக, இருக்கும். இதில் முக்கிய விடையம் என்னவென்றால் யாழ் தமிழர்கள் மாறவில்லை. மாறாக கிழக்கில் உள்ள தமிழர்களே இவ்வாறு முஸ்லீம் மதத்தை தழுவுகிறார்கள். ஏன் ? (ஒன்று) அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள். இரண்டாவது விடையம், அரபு நாடுகள் கிழக்கில் இயங்கும் இஸ்லாமிய குழுக்களுக்கு போதுமான அளவு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. இவர்களால் அரசாங்கமே கட்ட முடியாத அளவு, மிகப் பெரிய பல்கலைக் கழங்களை கட்ட முடிகிறது. தாமே மருத்துவமனைகளை கட்டுகிறார்கள். அரசாங்கத்தை இவர்கள் எதிர்பார்பது கிடையாது. அரேபிய தூதுவர்கள் இலங்கை சென்றால், ஜனாதிபதியை சந்திக்கிறார்களோ இல்லையோ. ஆனால் உள்ளூர் முஸ்லீம் தலைவர்களை சந்திக்கிறார்கள். தமிழர்கள் கஷ்டத்தில் நிலத்தை விற்றால், அதனை உடனே வாங்க முஸ்லீம்கள் பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கோடிக்கணக்கில் அல்ல, மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. இவர்கள் பணத்தை வைத்தே பல விடையங்களை நகர்த்தி வருகிறார்கள். இதுவே உண்மை நிலை. எனவே வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மிகவும் அவதானமாக, உண்ணிப்பாக கவனிக்கவேண்டிய பல விடையங்கள் உள்ளது. வெறுமனவெ சுயாட்சி தேவை, தனி நாடு தேவை என்று நாம் போராடினால். நாளை அது கிட்டினால் கூடி அதனை நாம் அனுபவிக்க முடியாத நிலை தோன்றும். வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆகும். நீ இந்துவாக இரு, கிறீஸ்தவனாக இரு, அல்லது முஸ்லீமாக இரு. ஆனால் ஒட்டுமொத்ததில் தமிழனாக இரு. தமிழால் நாம் ஒன்றுபட்டு இருக்கவேண்டுமே தவிர. மதங்களையும், மத போதனைகளையும் போட்டுக் குழப்பிக் கொண்டால், நாம் அழிவது நிச்சயம். உன் தாய் மொழி தமிழ் என்றால் நீ தமிழனாக இரு.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றியது தமிழ் என்பார்கள். உலகில் மிக மிக தொன்மையான ஒரு மொழியை பேசும் வல்லமை படைத்த நாங்கள், வெறும் மத போதனைகளை நம்பி எமது இனத்தின் மீதே போர் தொடுப்பது எவ்வளவு முட்டாளான விடையம் ? சகோதரர்களே , இனியாவது சிந்தியுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. விட்ட பிழைகளை திருத்திக் கொள்ள…

-athirvu.in

TAGS: