கருத்தடை சிகிச்சை விவகாரம்; மேலும் வெளியான ஷாக் தகவல்கள்!

குருநாகல் வைத்தியர் ஷாபி , சிசேரியன் சத்திரசிகிச்சை என்ற பெயரில் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தற்போது பாரிய விடயமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திசாநாயக்க புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் .

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பேராதனை வைத்தியசாலையில் பணிபுரிந்து இப்போது மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்று சென்ற சிராஜ் என்ற வைத்தியரும் இன்னுமொரு பெண் வைத்தியரும் இணைந்து சுமார் 6000 பெண்களை மலடாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே பேராதனை பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாட்டை செய்ய முன்வரவேண்டுமெனவும் எஸ் பி திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

-athirvu.in

TAGS: