டாக்டர் மகாதீர் APEC மாநாட்டிற்கு பிறகு விலகுவார்

டாக்டர் மகாதீர் APEC மாநாட்டிற்கு பிறகு விலகுவார்

வெள்ளிக்கிழமை என்ன முடிவு எடுத்தாலும், டாக்டர் மகாதீர் அபெக்கிற்குப் பிறகு விலகுவார்

வரவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் உச்சசபைக் கூட்டத்தின் போது பிரதமர் பதவி மாற்றம் குறித்து விவாதிக்கப்படுமா என்பதைப் பற்றி பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்குத் தெரியாது என்றார்.

எவ்வாறாயினும், இந்த நவம்பரில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டிற்குப் பிறகு பதவி விலாகுவதாக தனது முடிவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை கூட்டத்தின் போது மாற்றம் குறித்து பேசப்படுமா என்று கேட்டதற்கு, மகாதீர்: “தெரியாது,” என்று பதிலளித்தார்

“ஆனால் நான் முன்பு கூறியது போல், நான் எப்போதும் ராஜினாமா செய்யச் சொல்லும் போது ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். நான் ராஜினாமா செய்வேன்”, என்றார்.

“அது எனது வாக்குறுதி, நான் ராஜினாமா செய்வேன். கூட்டத்தின் போது எந்த முடிவை எடுத்தாலும், அபெக்கிற்குப் பிறகு நான் ராஜினாமா செய்வேன்,” என்று அவர் இன்று மாலை புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.