இலங்கை மற்றும் சீன சபாநாயகர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சீன சபாநாயகர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சீன நாடாளுமன்றின் சபாநாயகர் Li Zhanshu ஆகியோருக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவள்ளது.

இன்றைய தினம் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(நன்றி TAMIL WIN)