இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு மூன்றாம் மட்ட எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா மூன்றாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது மூன்றாவது மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், அங்கு நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin