ஊழியர் பற்றாக்குறையால் சிரமப்படும் ஆஸ்திரேலியா

ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் ஆஸ்­தி­ரே­லிய வர்த்­த­கங்­கள் கடு­மை­யான சவால்­களை

எதிர்­நோக்­கு­கின்­றன.

போதிய ஊழி­யர்­கள் இல்­லா­த­தால் திட்­ட­மிட்­ட­படி அவற்­றால் சேவை­ வழங்க முடி­ய­வில்லை.

குறைந்த நேரத்­துக்கு மட்­டுமே வர்த்­த­கம் செய்ய முடி­வ­தால் எதிர்­பார்த்த லாபத்தை ஈட்ட முடி­ய­வில்லை.

இத­னால் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய பிர­த­ம­ரான ஆண்­டனி
அல்­ப­னிசிக்கு நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கையை உயர்த்த நிறு­
வ­னங்­கள் அழைப்பு விடுத்­துள்­ளன.

2017ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒவ்­வோர் ஆண்­டி­லும் அதி­க­பட்­சம் 160,000 வெளி­நாட்டு ஊழி­யர்­களை ஆஸ்­தி­ரே­லிய நிறு­வ­னங்­கள் வேலை­யில் அமர்த்­த­லாம்.
ஆனால் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­டதை அடுத்து, ஆஸ்­தி­ரே­லியா அதன் எல்­லை­களை மூடி­யது.

இதன் கார­ண­மாக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வரவு தடைபட்­டது.

தற்­போது படிப்­ப­டி­யாக வழக்­க­நிலை திரும்­பு­வ­தால் கூடு­தல் ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர்.

 

 

Tamilmurasu