லைனாஸ் கழிவுகள் தேசிய அவமானதின் ‘நினைவுச்சின்னம்’ – யியோ

முன்னாள் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், யியோ பீ யின், லைனாஸின் நிரந்தர கழிவுகள் வைக்கும் இடம் (இடம்) “அவமானத்தின் தேசிய நினைவுச்சின்னமாக நிற்கும்” என்கிறார்.

“முதலாவதாக, பொருளாதார மேம்பாடு என்ற பெயரில், மலேசியாவில் நிரந்தரமாக கொட்டப்படும் கதிரியக்க கழிவுகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு 12 ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கிறோம்.”

“இரண்டாவதாக, கருப்பு-வெள்ளை ஒப்பந்தத்தின் உறுதிமொழிக்காக இந்த நிறுவனத்தை விட்டுவிடுவோம். அப்படியே ஒரு வளரும் நாட்டின் அரசாங்கத்தை வளர்ச்சி கண்ட நாடுகளின் ஒரு நிறுவனம் துன்புறுத்தலாம், அதோடு அது பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் அதை நாம் சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற செய்தியை அனுப்பும்.”

“ஆரம்பத்தில் இருந்தே, கழிவுகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நான் எடுத்த முயற்சிகள்  தோல்வியுற்றதற்கு இதுவே காரணம்” என்று அவர்வெளியிட இருக்கும் “முடியாதா வேலைகள்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

குவாந்தனில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள புக்கிட் கெத்தாம் நிரந்தர வனப் பகுதியின் 58.25 ஹெக்டேர்களை ஆக்கிரமித்திருக்கும் கழுவுக்கான நிலப்பரப்பை  சுட்டிக்காட்டினார்.

புக்கிட் கெட்டம் தளம் இறுதியில் சுற்றுச்சூழல் துறையால் நிராகரிக்கப்பட்டது மற்றும் கெபெங் தொழிற்பேட்டையில் உள்ள லைனாஸ் ஆலைக்கு அடுத்ததாக ஒரு புதிய தளம் பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் அதன் பிறவகையான விரிசல் மற்றும் கசிவுகளுக்கு  வசதியை மலேசியாவில் கட்டக்கூடது  வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று லைனாஸ்க்கு நிபந்தனை விதித்ததுதான் இன்று மனதை அமைதிபடுதுகிறது என்று அவர் கூறினார்.

இதன் பொருள், இப்போது இடைநிலை தயாரிப்புகள் மட்டுமே செயலாக்கத்திற்காக மலேசியாவிற்கு அனுப்பப்படும், மேலும் இது லைனாஸ் ஏற்கனவே மலேசியாவில் கொட்டும் கதிரியக்கக் கழிவுகளை சேர்க்காது.

“லைனாஸுக்கு மாற்று இடத்தில் விரிசல் மற்றும் கசிவு வசதியை உருவாக்குவதற்கான நிபந்தனையை நாங்கள் விதிக்கவில்லை என்றால், மலேசியாவில் குவிந்துள்ள கதிரியக்கக் கழிவுகளைக் கொண்ட கசிவு சுத்திகரிப்பு எச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் வகையில் மலேசியாவில் கழிவுகளின் அளவு வளர்ந்து கொண்டே இருக்கும்.” என்கிறார்.

அக்டோபர் 2018 இல், ஹராப்பான் அரசாங்கம் லைனாஸ் பிரச்சினையில் முன்னோக்கிச் செல்லும் வழியைப் பரிந்துரை செய்ய ஒரு குழுவை அமைத்தது.

மற்றவற்றுடன், கதிரியக்கக் கழிவுகளைச் சேமிக்க ஒன்றை அமைக்க வேண்டும் அல்லது மலேசியாவிலிருந்து கழிவுகளை அகற்ற வேண்டும் என்று அது முன்மொழிந்தது.

மிக சமீபத்தில், லைனாஸ் அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சர் டாக்டர் ஆதம் பாபாவை அணுகி, அதன் விரிசல் மற்றும் கசிவு வசதி நிபந்தனையை அகற்ற கோரியுள்ளதாக தெரிகிறது. இல்லையெனில், இந்த கதிரியக்க கழிவுகளுக்கான வசதி ஜூலை 2023க்குள் அயல் நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும்.

மலேசியாகினி கருத்துகளுக்கு ஆதம் மற்றும் லைனாஸைத் தொடர்பு கொண்டது. லினாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. எவ்வாறாயினும், உரிமத்தை புதுப்பிக்க லைனாஸிடமிருந்து எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை என்று செய்தி போர்ட்டல் கூறுகிறது..