பணவீக்கத்தைச் சமாளிக்கத் தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஸிம்பாப்வே

நிலையற்ற நாணய மதிப்பு, அதிகரிக்கும் பணவீக்கம்.இவற்றைச் சமாளிக்க வித்தியாசமான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஸிம்பாப்வே.

அந்நாட்டு மத்திய வங்கி தங்க நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது.வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட 2,000 நாணயங்கள் வர்த்தக வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

தங்க நாணயங்களைக் கடைகளில்கூட பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான பணவீக்கத்திற்குப் பிறகு,  உள்ளூர் நாணயத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கணிசமாகக் குறைந்தது.

உள்ளூர் மக்களும் வர்த்தகர்களும் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்த விரும்புகின்றனர். குறிப்பாக அமெரிக்க டாலர் அதிகம் நாடப்படுகிறது. தற்போது அதிகம் நாடப்படும் அமெரிக்க டாலருக்குத் தங்க நாணயங்கள் ஒரு மாற்றாக அமையும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாணயங்களை எளிதில் ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் சொல்கின்றனர். அவற்றை வங்கிக் கடன்களுக்கு அடைமானமாகவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.

 

 

-smc