ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாநில அளவில் அங்கு கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.

அங்கு இதுவரை 40 பேருக்குக் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்திலேயே ஆக அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அந்த மாநிலத்தில் முதல் கட்டமாகத் தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் அடுத்த மாதம் கூடுதல் தடுப்புமருந்து அங்கு சென்று சேரும்வரை, தடுப்புமருத்தின் இருப்பு குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

 

-smc