இலங்கையின் கடனில் பாதி சீனாவிடமிருந்து: IMF உடன்படிக்கையை பீய்ஜிங்கின் நிலைப்பாடே தீர்மானிக்கும்!

இலங்கையின் இருதரப்பு கடனில், பாதியளவான கடன், சீனாவிடமிருந்து இருந்து பெறப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு பீய்ஜிங்கின் நிலைப்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது.

நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தின்படி, இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதி அளவு கடன் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடன் கொடுத்தோர் தரவுகள்

2022, ஆகஸ்ட்டில், நிதி அமைச்சின் கடன் கொடுத்தோர் புதுப்பிப்பின்படி, இலங்கையின் மொத்த இருதரப்புக் கடன் 10 பில்லியன் டொலர்களாகும்.

கடந்த ஆண்டு இறுதி வரை இதில் 44 சதவீதம் சீனாவிடம் இருந்து கடன் வாங்கியது. ஜப்பான் 32 சதவீதத்திலும், இந்தியா 10 சதவீதத்திலும் உள்ளன. தென் கொரியா மூன்று சதவீதத்திலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்வீடன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலா இரண்டு சதவீதத்திலும் உள்ளன.

மீதமுள்ள ஒரு சதவீத கடனை, சவுதி அரேபியா, அமெரிக்கா, குவைத், ஸ்பெயின் மற்றும் ஈரான் ஆகியன இலங்கைக்கு வழங்கியுள்ளன. இதில் மத்திய அரசு மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இருதரப்பு கடன் 3 பில்லியன் டொலர்களாகும்.

வெளிச் சந்தை கடன்கள்

இந்த வெளிநாட்டு நாணயக் கடனுக்கான சராசரி வட்டி விகிதம் 2.9 சதவீதமாக வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் உள்ளூர் நாணயக் கடனுக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதமாக உள்ளது.

எனினும் வெளிச் சந்தைக் கடன்கள் – சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் என்பன நிதி அமைச்சின் கடன் விளக்கங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அடுத்த கட்டம், சர்வதேச நாணய நிதியம் உடனான கலந்துரையாடல்களை இறுதி செய்வதாகும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.

இதனை தொடர்ந்து, கடன் வழங்குநர்களைப் புதுப்பிக்க ஒரு பொது முதலீட்டாளர் கடன் விளக்கத்தை தயாரித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டுவதாகும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

சர்வதேச நாணய நிதிய குழுவின் ஒப்புதலை அடைவது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர், கடன் கொடுத்தவர்களுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதே இறுதி கட்டமாக இருக்கும்.

இந்தநிலையில் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய பணியாளர்கள் ஆகஸ்ட் 24-31 வரை கொழும்புக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw