வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டாம் டிஏ பி வலியுறுத்துகிறது

இந்த வாரம் 25 அடிப்படை புள்ளிகள் 2.25% இருந்து  2.5% இருக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும். ஒரு நாள் பொழுது வட்டி கொள்கை  விகிதத்தை (overnight policy rate) அதிகரிக்க வேண்டாம் என்று தேசிய நெகாராவை DAP வலியுறுத்தியுள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், DAP தலைவர் லிம் குவான் எங், OPR ஐ அதிகரிப்பதற்கான பேங்க் நெகாராவின் முந்தைய முயற்சிகள் பணவீக்கத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார், நுகர்வோர் விலைக் குறியீட்டெண் ஜூன் மாதத்தில் 3.4% ஒப்பிடும்போது ஜூலையில் 4.4% உயர்ந்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் பினாங்கு முதலமைச்சருமான லிம், வட்டி விகிதங்களை உயர்த்துவது பணவீக்கத்தைக் குறைக்காது என்று வாதிட்டார், ஏனெனில் இது தேவை அதிகரிப்பால் ஏற்பட்டது அல்ல மாறாக உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளால் ஏற்பட்டது.

OPR-யை  உயர்த்துவது பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை ஏற்றும். இது Jihad On Inflation Special Cabinet Committee தலைவர் அன்னுவார் மூசா முகத்தில் கரி பூசுவது போலாகும் என்றார் லிம்.

“OPR இன் அதிகரிப்பு நாணய சந்தையில் ரிங்கிட்டை ஆதரிப்பதில் எந்த நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்று லிம் கூறினார்.

பணவீக்கம் மற்றும் ரிங்கிட்டின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, OPR ஐ உயர்த்துவது மக்களின் சமூக-பொருளாதார நல்வாழ்வை மோசமாகப் பாதிக்கும் என்று லிம் எச்சரித்தார்.

“வட்டி விகிதங்களை அதிகரிப்பது வீடுகள் மற்றும் வாகனங்கள்மீதான தனிநபர் கடன்களின் செலவுகள், வணிகச் செலவுகள், வர்த்தகர்களின் பணப்புழக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் நிதிச் செலவுகள் ஆகியவற்றில் தேவை இல்லாமல் அதிகரிக்கும்”.

“பேங்க் நெகாராவும் அரசாங்கமும் வணிகங்களுக்கு உதவ வேண்டும், வணிகங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், குறிப்பாக SME கள், கோவிட்-19க்கு பின் கடினமான பொருளாதார சூழலில் தங்கள் வணிகத்தை உயிர்வாழ மற்றும் புதுப்பிக்கப் போராட வேண்டும்,” என்று லிம் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இரண்டு ஆண்டுகளாகப் பேங்க் நெகாரா 1.75% OPRஐ பராமரித்தது. மே மாதத்திலிருந்து இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.