போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் – ஈப்போ காவலர்

சனிக்கிழமையன்று ஈபோவின் ஜாலான் கேரியில்(alan Carey) போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட  ஒருவர், Permaisuri Bainun மருத்துவமனையில் இன்று காலமானார்.

62 வயதான ஆண் சந்தேக நபர் காலை 9 மணியளவில் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஈபோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP யஹயா ஹாசன்(Yahaya Hassan) கூறினார்.

“போலீசார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு, கைதியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காலை 10.30 மணியளவில் அவசர சிகிச்சைக்குப் பின் கைதி இறந்தது உறுதிசெய்யப்பட்டதாக யஹாயா கூறினார், புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலைகள் இணங்குதல் துறையின் கீழ் காவலில் உள்ள மரணங்கள்மீதான குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும் கூறினார்.

“மரணத்திற்கான காரணத்தை அறிய நாளைப் பிரேத பரிசோதனை செய்யப்படும்,” என்றார்.