பிரான்ஸ் நாட்டவர்கள் விரைவில் ஈரானை விட்டு வெளியேற வேண்டும் : பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஈரானில் உள்ள பிரான்ஸ் நாட்டினர் பொய்யான உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் அங்கிருக்கும் பிரான்ஸ் நாட்டினர் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சம் வலியுறுத்தி உள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணத்திற்காக சென்றிருப்பவர்களுக்கும் அங்கு வசிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து பொருந்தும். அவர்கள் கைது அல்லது காவலில் வைக்கப்பட்டால், அடிப்படை உரிமைகள் மற்றும் நபரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

-ift