வாக்காளர்கள் ‘லஞ்சத்தை’ நிராகரித்தால் அம்னோ தோற்றுவிடும் – மகாதீர்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ஒரு மறுப்பில், டாக்டர் மகாதீர் முகமது, வாக்காளர்கள் இலஞ்சத்தை நிராகரித்தால் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வியடையும் என்று கூறினார்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முன்னாள் பிரதம மந்திரி தான் முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையை தெளிவுபடுத்தினார்- அது ஜாஹிட் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதால் அம்னோ வெற்றி பெறும் என்று நான் கூறினேன். எனவே, இம்முறை வாக்காளர்கள் அம்னோவின் பணத்தை நிராகரித்தால், அம்னோ வெற்றி பெறாது,”என்று மகாதீர் இன்று கூறினார்.

மேலும், அம்னோவின் குறைபாடுகளை வாக்காளர்கள் அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.