நவம்பர் 19-ம் தேதி பொதுத்தேர்தல்  

15வது நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரச்சார காலம் 14 நாட்கள் நீடிக்கும். முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும்.

பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மற்றும் புகாயா இடைத்தேர்தல் ஆகியவை மேற்கண்ட தேதிகளைப் பின்பற்றும்.

ஜொகூர், சரவாக், மலாக்கா மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் சமீபத்திய மாநிலத் தேர்தல்களுக்கு  நியமித்த  14 நாள் பிரச்சார காலம் போதுமானதாக இருக்கும்.

தபால் வாக்கு காலக்கெடு

தபால் ஓட்டுகளை பதிவு செய்ய மூன்று தனித்தனி காலக்கெடு இருக்கும்.

வெளிநாட்டில் தங்கியுள்ள மலேசியர்கள் (வகை 1 பி) அக்டோபர் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

முக்கியமான அரசு நிறுவனங்களில் (வகை 1C) அங்கத்தினர்கள் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இறுதியாக, தேர்தல் ஆணைய ஊழியர்கள் அல்லது ஊடகப் பணியாளர்கள் (வகை 1A) பதிவு செய்ய நவம்பர் 2 வரை அவகாசம் உள்ளது.

இந்தத் தேர்தலில் 21,173,638 வாக்காளர்கள் தகுதி பெறுவார்கள் – இதில் 2018 தேர்தலை விட 41.7 சதவீதம் அதிகம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தானாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டதே இதற்குக் காரணம்.

அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆய்வு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.