ஓமானில் விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள் – குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரி!

ஓமானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷான் குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

இன்று (29) அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போதே இவர் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு இரத்து

ஓமானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், ஈ.குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ibc