“மெஸ்ஸியைக் குறிவைத்து விளையாடுவது இலக்கல்ல; ஒட்டுமொத்த அர்ஜென்ட்டினா குழுவைத் தடுத்து நிறுத்துவோம்” – குரோஷியா

கத்தாரில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்ட்டினாவைச் சந்திக்கிறது குரோஷியா.

2018ஆப் போன்று இம்முறையும் இறுதியாட்டத்துக்குச் செல்ல முனைந்துள்ளது குரோஷியா.

இந்நிலையில் அர்ஜென்ட்டினா அணியின் சிறந்த விளையாட்டாளராகக் கருதப்படும் லயனல் மெஸ்ஸியை மட்டுமே குறிவைத்து விளையாடுவது தனது உத்தியல்ல என்று குரோஷியா அணி தெரிவித்துள்ளது.

முழு அணியையும் தடுத்து நிறுத்துவதே நோக்கம் என்று அணியின் விளையாட்டாளர் புருனோ பெட்கோவிச் (Bruno Petkovic) சொன்னார்.

அர்ஜென்ட்டினா அணியில் மெஸ்ஸி மட்டுமே சிறந்த விளையாட்டாளர் அல்ல, மற்ற சிறந்த விளையாட்டாளர்களும் இருக்கின்றனர் என்று சுட்டிய அவர், முழு அணியையும் எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

7 முறை Ballon D-Or விருதைப் பெற்றிருக்கும் மெஸ்ஸி, உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்ட்டினா அணியின் வெற்றிகளுக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார்.

 

 

-smc