ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேற சீனர்களுக்கு அறிவுறுத்தல்.!

ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேறுமாறு சீனக்குடிமக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. சீனர்கள் அதிகம் சென்று வரும் இந்த ஹோட்டல் மீது குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானை விட்டு கூடிய விரைவில் வெளியேறுமாறு சீனா, தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5 சீனர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை  நடத்தவும், ஆப்கானிஸ்தானில் உள்ள சீனர்களின் பாதுகாப்பு மற்றும் சீன  நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வலுவான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி தலிபான் அரசுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

-ds