கிளந்தான், திரகானுவில் வெள்ள நிவாரணத்திற்காகச் சிலாங்கூர் ரிம1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கிறது

சிலாங்கூர் அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும் திரங்கானுவிற்கு மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கும்.

இன்று ஒரு அறிக்கையில், மந்திரி பெசார் அமிருதின் ஷாரி (மேலே) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரிம 500,000 வழங்கப்படும் என்றார்.

“பேரழிவின் சுமையைக் குறைப்பதற்காக, கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு 2022 #KitaSelangor வெள்ள உதவி பங்களிப்பை நிதி உதவி வடிவில் வழங்க மாநில அரசு தயாராக உள்ளது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொத்தம் 500,000 ரிங்கிட்”, என்று அவர் கூறினார்.

மாநிலத்தின் விரைவு நடவடிக்கை பணிக்குழு (Pantas) மற்றும் சிலாங்கூர் தொண்டர் (Serve) ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை அனுமதிக்கப்பட்டவுடன் உதவி வழங்கத் தயாராக உள்ளன என்று அமிருடின் மேலும் கூறினார்.

திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கூடுதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, கிழக்கு கடற்கரை மாநிலங்களில் நாளை வரை தொடர்ச்சியான பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, திரங்கானுவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,326 குடும்பங்களைச் சேர்ந்த 11,415 பேராக உயர்ந்துள்ளது, இது முந்தைய இரவு 1,068 குடும்பங்களைச் சேர்ந்த 3,785 பேராக இருந்தது.

ஹூலு திரங்கானுவில் 1,276 குடும்பங்களைச் சேர்ந்த 3,998 பேரும், பெசுட்டில்(Besut) 3,765 பேரும் (1,040 குடும்பங்களும்), செட்டியுவில்(Setiu) 2,157 பேரும் (632 குடும்பங்கள்), கெமமன்(Kemaman) 1,008 பேரும் (277 குடும்பங்கள்), மராங்(Marang) 119 பேர் (14 குடும்பங்கள்) மற்றும் கோலா திரங்கானு(Kuala Terengganu) (14 குடும்பங்கள்) ஆகியோரும் நேற்று அதிக எண்ணிக்கையிலான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளந்தானில், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய இரவு 5,642 பேருடன் ஒப்பிடும்போது 8,645 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

கோத்தா பாரு(Kota Bharu), பாசிர் மாஸ்(Pasir Mas), தும்பட்(Tumpat), பச்சோக்(Bachok), தானா மேரா(Tanah Merah), பாசிர் புத்தே(Pasir Puteh), கோலா க்ராய்(Kuala Krai), மசாங்(Machang) மற்றும் ஜெலி(Jeli) ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள 80 தற்காலிக வெளியேற்ற மையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பத்தாங் காலி நிலச்சரிவு சோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிலத்தின் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்வதாகக் கோம்பாக் எம்.பி அறிவித்தார்.