ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவைக் குழு

தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் அமைக்கப்படும்போது, ​​அது தனது தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பொதுவாக அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

ஆனால் அன்றைய அரசாங்கத்தில் கூட்டணி மற்றும் கட்சிகள் தனித்தனி அறிக்கைகளைக் கொண்டிருந்ததால், எந்தப் பிரச்சார வாக்குறுதிகளைப் பின்பற்றுவது என்பதில் தெளிவு இல்லை.

இதைத் தீர்க்க, பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி (மேலே) கூறுகையில், தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து, எந்தத் திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய, அரசாங்கக் குழுவை அமைக்க, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஸுகி அலியிடம் அமைச்சரவை பணித்துள்ளது என்றார்.

“நாங்கள் வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளின் கூட்டணி, ஒவ்வொன்றும் உண்மையில் GE15 இல் எங்கள் சொந்த அறிக்கையைக் கொண்டிருந்தன”.

“ஆனால் இப்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்பதால், அனைத்து அறிக்கைகளையும் விரைவாக இணைக்க, ஒரு நேரக் கட்டுப்பாடு உள்ளது.

“அமைச்சரவை மட்டத்தில், ஒவ்வொரு கூட்டணி அறிக்கையிலிருந்தும் அனைத்து குறிப்பிட்ட திட்டங்களையும் தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைக்க ஏற்கனவே ஒரு குழு செயல்பட்டு வருகிறது,” என்று இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

எவ்வாறெனினும், அரசாங்கக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் (Memorandum Of Agreement) பிரிவு 2 இன் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைகளின் தொகுப்புக்கு ஏற்ப முடிவுகள் கட்டுப்பட்டிருக்கின்றன என்று ரபிசி வலியுறுத்தினார்.

இன வேறுபாடின்றி வறுமையை ஒழிப்பதற்கும், பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஏழைகளுக்கு நியாயமான பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வை அதிகரிப்பதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதிபூண்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பானுக்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில், MOA ஏன் குறிப்பிட்ட சீர்திருத்தங்களைக் கோடிட்டுக் காட்டவில்லை என்பது குறித்து ரஃபிசியிடம் கருத்து கேட்கப்பட்டது.

அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான நிதி வழங்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ரபிசி, இது பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி என்றார்.