தேசிய புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து – பிரதமர் கிளந்தான்  செல்கிறார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கிளந்தானுக்குச் சென்று அங்குள்ள வெள்ள நிலைமையை மதிப்பிடுகிறார்.

புத்ராஜெயாவில் இன்று அமைச்சரவைக்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அன்வார், வெள்ளத்தை சமாளிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் மற்றும் ஆயுதப்படைகளிடமிருந்து அதிக ஈடுபாட்டை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

“வெள்ளம் மற்றும் மக்களின் துயரங்கள் காரணமாக, டத்தாரன் மெர்டேக்காவில் பெரிய புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பருவமழை வெள்ளம் பல தீபகற்ப மாநிலங்களைத் தாக்கி வருகிறது, கிளந்தான் மற்றும் திரங்கானு இதனால் பெரிதும் பாதித்துள்ளது.

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 72,092 பேர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் 31,316 பேர் கிளந்தனைச் சேர்ந்தவர்கள், 40,453 பேர் திரங்கானுவைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு கிழக்கு கடற்கரை மாநிலங்களிலும் வெள்ளத்தால் ஐந்து பேர் பலியாகினர்.

கிளந்தானில் 15 மாத குழந்தையும், திரங்கானுவில் இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்தனர்.

கிளந்தானில் உள்ள மூன்று சகோதரிகளும் பலியாகினர், அவர்கள் தங்கள் வீடு வெள்ளத்தில் மூழ்கியபோது மின்சாரம் தாக்கி இறந்தனர்.