இலங்கையில் இம்முறை சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், விழாவின் இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

 

 

-ift