மோசமான தோல்வி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை

2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சந்தித்த மோசமான தோல்வி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிக்கையானது கேப்டன், தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு மற்றும் அணி மேலாளரின் தோல்வி தொடர்பான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்.

5 நாட்களுக்குள் ‘அறிக்கையை’ சமர்ப்பிக்குமாறு குழு மேலாளரிடம் SLC கோரியுள்ளது.

22 ஓவர்களில் ஆட்டமிழந்து 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இறுதி ஒருநாள் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான செயல்பாடுகளின் பின்னணியை மறுபரிசீலனை செய்து புரிந்து கொள்ள இந்த அறிக்கை உதவுமென இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

-jv