உலகிலேயே மிகப் பாதுகாப்பான நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிங்கப்பூர்

உலகிலேயே மிகப் பாதுகாப்பான நாடாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பாதுகாப்பாக இருக்க உள்துறை அமைச்சின் அதிகாரிகள் இடைவிடாமல் பாடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றங்களுக்குத் திரும்புவது குறைந்துள்ளது.

சிங்கப்பூர்ச் சிறைச் சேவையும் மஞ்சள் நாடா திட்டமும்  ஒன்றிணைந்து சமூகப் பங்காளிகள், முதலாளிகள், குடும்பங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியோரிடமிருந்து கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளது.

ஆகையால், முன்னாள் குற்றவாளிகளிடையே மீண்டும் குற்றங்கள் புரிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை  தீச்சம்பவங்கள் குறைந்ததாகத் தெரிவித்தது. சைக்கிளோட்டிகள் சாலை விபத்துக்குள்ளாவது குறைந்துள்ளதாகப் போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.