மூடா: சையட் சாடிக், அரசு தலைமைச் செயலகத்தில் பிரச்சினைகள்குறித்து விவாதிக்க விரும்புகிறார்

மூடா தலைவர் சையட் சாடிக் சையட் அப்துல் ரகுமான் கூறுகையில், முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அரசாங்கத்தின் செயலகத்தின் ஒரு பகுதியாக இருக்க தனது கட்சி விரும்புகிறது, பதவிகளைத் தொடர அல்ல என்றார்.

தற்போதைய நெருக்கடியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவதே கட்சியின் முன்னுரிமை என்று கூறிய மூவார் எம்.பி, விமர்சகர்கள் குறுகிய மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம் என்று கூறினார்.

“மூடாவின் முன்னுரிமை பதவிக்கான விஷயம் அல்ல, ஆனால் ஒரு முக்கியமான தற்போதைய  அரசியல் பிரச்சினை ஆகும்”.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலை குறுகிய கோணத்தில் பார்க்க வேண்டாம்,” என்று கூறினார்.

தலைமைச் செயலகக் கூட்டங்களில் கட்சி எழுப்ப விரும்பும் விஷயங்களில் இளைஞர் பிரச்சினைகள் மற்றும் B40 வருமானக் குழுவின் அவலநிலை ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களுக்காக அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக மூவார் எம்.பி. கூறினார்.

“ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், நாங்கள் அதை உள்ளுக்குள் விவாதிப்போம், “என்று அவர் மேலும் கூறினார்.

பிப்ரவரி 8 அன்று, மூடாப் பொதுச்செயலாளர் அமீர் ஹரிரி அப்த் ஹாடி, அம்னோவின் தலைமையகத்தில் முந்தைய நாள் நடைபெற்ற அரசாங்கத்தின் முதல் செயலகக் கூட்டம்குறித்து அழைப்பும் வரவில்லை என்பதால் கட்சி இருளில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிருப்தியை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தச் சந்திப்பு ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவிய கட்சிகளுக்கானது என்று கூறினார்.

மேலும், 6 மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி அளித்துள்ளதாகவும் அன்வார் அறிவித்தார்.

மூடாவைத் தவிர, பார்ட்டி பங்சா மலேசியா (PBM) மற்றும் சபாவை தளமாகக் கொண்ட சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி (Democratic Harmony Party) ஆகியவையும் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

இது PBM தலைவரான லாரிஸங் (Larry Sng) சிறு கட்சிகள் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.