உள்ளூராட்சி தேர்தல் தாமதம் குறித்து விசாரணை நடத்தவுள்ள மனித உரிமை ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமடைவது குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் தாமதமாவது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதப்படுத்தப்படுவது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணை

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தற்பொழுது நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதனால் பிரிதொரு திகதியில் மனித உரிமை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாக அனுமதிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

 

 

-tw