அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகளுக்கு COVID-19 தடுப்பூசிகள் கட்டாயமில்லை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் COVID-19 பயணக் கட்டுப்பாடுகளை மீட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பது அவசியமில்லை.

அது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் பொதுச் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். நடைமுறை நாளை மே 12 நடப்புக்கு வரும்.

2021-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அரசாங்க ஊழியர்கள் சுமார் 3.5 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகள் தடுப்பூசிச் சான்றிதழையும் கிருமித்தொற்று இல்லை என்று குறிப்பிடும் ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை. மெக்சிகோ குடியேறிகளுக்கு எதிரான Title 42 எனப்படும் COVID-19 கட்டுப்பாடுகளும் மீட்டுக்கொள்ளப்படவுள்ளன.

2020ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் குடியேறிகளை உடனடியாக மெக்சிகோவுக்கு நாடு கடத்த வகைசெய்தது. கட்டுப்பாடுகள் 11 மே மீட்டுக்கொள்ளப்படும்போது அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சிகள் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எண்ணுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தற்போது அதிகப் பாதுகாப்பு போடப்படுகிறது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான குடியேறிகள் எல்லைப்பகுதியில் கூடியுள்ளனர் என்று  சொல்லப்படுகிறது.

 

 

 

-sm