கனடாவில் முதியோர் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் மரணம்

கனடாவில், கனரக வாகனம் ஒன்று பேருந்தை மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

மனிடோபா மாநிலத்தில், பெரும்பாலும் முதியோர் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதாகக் காவல்துறை தெரிவித்தது.

பேருந்தில் சுமார் 25 பேர் இருந்ததாகக் நம்பப்படுகிறது.

அண்மைக் காலத்தில், கனடாவில் நேர்ந்த மோசமான சாலை விபத்துகளில் இதுவும் ஒன்று.

சாலை விபத்தில் ஈடுபட்ட 2 வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிருடன் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்துக்கு யார் காரணமாக இருக்கக்கூடும் என்ற விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அன்புக்குரியவர்களை இழந்தோருக்குக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ட்விட்டர் இல் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக்கொண்டார்.

 

 

-sm