தங்க ஜெல்லை உடையில் மறைத்து கடத்த முயன்ற விமான நிலைய பெண் ஊழியர் கைது

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வரியில்லா வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை, ஐந்து கிலோ எடையுள்ள 100 மில்லியன் தங்க ஜெல்லை கடத்த முயன்ற போது கைது செய்தனர்.

24 வயதுடைய பெண், நான்கு பார்சல்களில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததுடன், நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறும் போது, சிசிடிவி கேமராக்களில் அவரது நடத்தையை அவதானித்த பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணும் கடத்தப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

 

-dm