பணிப்பாளர் சபையின் சதியால் நான் நீக்கப்பட்டேன் – ரொஹான் பெர்னாண்டோ

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபை ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரொஹான் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்கும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக பணிப்பாளர் சபையின் சதியால் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக  ரியாஸ் மியுலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராவார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ, இனி நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் சபை உறுப்பினராக செயற்படுவார் என கொழும்பு பங்குச் சந்தைக்கு அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-ad