முக்கிய வெளிநாட்டு முதலீடுகள் அரசாங்கத்தை வலுவானவை, நிலையானவை என்பதை நிரூபிக்கின்றன – பிரதமர்

மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இன்க்(Tesla Inc) போன்ற பெரிய வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவது தற்போதைய நிர்வாகத்தின் கீழ் மலேசியா நிலையானது மற்றும் வலுவானது என்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது அதன் பெயருக்காக அல்ல, மாறாகப் பக்காத்தான் ஹராப்பானுக்கும் BNனுக்கும் இடையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் நிலைத்தன்மையால் என்று அவர் கூறினார்.

“ஒற்றுமை அரசாங்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதைத் தேர்ந்தெடுப்பது ஹரப்பான் மற்றும் BN இன் புத்திசாலித்தனம்,” என்று அவர் கூறினார்.

திரங்கானுவின் துங்குனில் உள்ள பண்டார் அல் முக்தாபி பில்லா ஷாவில் இன்று செந்துஹான் காசிஹ் தேச தெரெங்கானு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

ஜூலை 14 அன்று, டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (மேலே) மலேசியாவில் அதிக முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.

டெஸ்லாவின் முதலீடுகுறித்த சமீபத்திய வளர்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், சைபர்ஜெயாவில் உள்ள தொழில்நுட்ப மற்றும் மின்சார வாகன நிறுவனத்தின் தலைமையகம் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

கடந்த வாரம் டெஸ்லாவின் நிர்வாக இயக்குநருடனான சந்திப்பின்போது டெஸ்லா அலுவலகத்தைத் திறக்க அழைப்பு விடுத்துள்ளதாக அன்வார் கூறினார்.

டெஸ்லாவைத் தவிர, உலகப் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான கீலி குளோபல் பேராக் தஞ்சோங் மாலிமில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வாகன நகரத்தை உருவாக்கும் என்று நிதியமைச்சரான அன்வார் கூறினார்.

இந்தப் பெரிய முதலீடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்றார்.

நிலையான அரசாங்கத்திற்காகக் காத்திருந்த கீலி

“நிறுவனம் (Geely) 10 ஆண்டுகளாக (ஆட்டோ நகரத்தைத் திறக்க) திட்டமிட்டுள்ளது, ஆனால் அது ஒரு நிலையான அரசாங்கத்திற்காகக் காத்திருந்தது”.

“இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்க இளைஞர்கள், குறிப்பாகத் திரங்கானுவைச் சேர்ந்த இளைஞர்கள் தஞ்சோங் மாலிமுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதை நான் உறுதி செய்வேன்,” என்று அவர் கூறினார்.

அதே விழாவில், திரங்கானுவில் 12,570,000 ரிங்கிட் மற்றும் ரிம797,250 மதிப்புள்ள வருமானத்தை உயர்த்தும் திட்டம் ஆகியவற்றுக்கான மாதிரி காசோலையையும் பிரதமர் பெறுநர்களின் பிரதிநிதியிடம் வழங்கினார்.

துணைப் பிரதமரும் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சருமான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, மத்திய திரங்கானு மேம்பாட்டு ஆணையத்தின் (கெடெங்கா) தலைவர் அஹ்மட் சைட் மற்றும் பல கேபினட் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.