அமைச்சர்: புகைமூட்டம் நிலை நீடிக்காது

காற்றின் மாற்றத்தால் நாட்டில் புகைமூட்டம் நிலை நீடிக்காது என இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் தெரிவித்தார்.

இருப்பினும், காற்று மாசுக் குறியீடு (Air Pollutant Index) 151 முதல் 200 மற்றும் அதற்கு மேல் 24 மணி நேரத்திற்கும் மேலாக அளவீடுகளை எடுத்தால் மேக விதைப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நிக் நஸ்மி, ஹைப்ரிட் ஒற்றை-துகள் லாக்ராஞ்சியன் ஒருங்கிணைந்த பாதை மற்றும் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை முன்னறிவிப்பு மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பனிமூட்டத்தின் எல்லை தாண்டிய நகர்வுகுறித்த ஐந்து நாள் முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தயாரித்துள்ளது என்றார்.

வானிலை ஆய்வுத் துறையின் இணையத்தளத்தினூடாக முன்னறிவிப்புகளின் வெளியீடு பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்றார்

நிக் நஸ்மி, தற்போதைய புகைமூட்டம் நிலைமைகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கியபோது இவ்வாறு கூறினார்.

புகைமூட்டம் நகர்வுபற்றிய முன்னறிவிப்புகளைத் தவிர, வானிலை ஆய்வுத் துறையானது தீ அபாய மதிப்பீடு முறையை (Fire Danger Rating System) மேம்படுத்தி, தீப்பரவுவதற்கான சாத்தியக்கூறுகள்குறித்து ஏழு நாள் முன்னறிவிப்பு அளிக்கும் என்றார்.

அனைத்து ஆசியான் நாடுகளும் எல்லை தாண்டிய புகைமூட்டத்திற்கு  எதிராக முன்கூட்டியே தடுக்கும் வழிமுறையாக FDRS ஐ பயன்படுத்துவதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன என்றார்.