இலங்கை முழுவதும் அரச ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் மத்திய மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் நாடாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது நாளை நண்பகல் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாளை நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-=ib