கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம், பெர்சத்துவின் சொந்த கோல்.

சட்டம் இயற்றப்பட்டபோது பெர்சத்து நிராகரித்த ஒரு கட்சி தாவல் எதிர்ப்பு பிரிவு, அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அதன் நான்கு எம்.பி.க்கள் உறுதியளித்ததையடுத்து, சொந்த கட்சியை வேட்டையாடத் திரும்பியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறுகிறார். இது அவர்களே போட்ட சொந்த கோல் போன்றது.

அப்போதைய சட்ட மந்திரி வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் அமைச்சரவையில் சமர்ப்பித்த கட்சி தாவல் எதிர்ப்பு எதிர்ப்பு மசோதா வரைவு, கட்சி நிலைப்பாட்டிற்கு எதிராக ஒரு எம்.பி சென்றாலோ அல்லது மக்களவையில் கட்சிக்கு  இணங்கத் தவறினாலோ, அந்த தொகுதி     காலியாக்கப்பட்டது என அறிவிக்கும் விதி உள்ளது என்றார்.

அப்போது சுகாதார அமைச்சராக இருந்த கைரி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இருந்து பின்னர் நீக்கப்பட்ட சரத்துக்கு பெர்சத்து பிடிவாதமாக எதிர்த்தது.  பெர்சத்து இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அரசாங்கத்தை ஆதரித்த கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது.

“நேற்று, பெர்சத்து தலைவர் முகைதின் யாசின், கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை குறைபாடுடையது என்று விவரித்தார், மேலும் மறுஆய்வுக்கு அழைப்பு விடுத்தார். அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய முக்கியமான பலவீனங்கள் இந்தச் சட்டத்தில் உள்ளன என்றார்.

அன்வார் இப்ராகிம் அரசாங்கத்திற்கு பெர்சத்துவைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை சமீபத்தில் உறுதியளித்தனர். அவர்கள் இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (குவாலா கங்சார்), சுஹைலி அப்துல் ரஹ்மான் (லாபுவான்), அஸிஸி அபு நைம் (குவா முசாங்) மற்றும் ஜஹாரி கெச்சிக் (ஜெலி).

பெர்சத்து தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் செய்தியாளர்களிடம், அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அரசாங்கத்தை ஆதரிக்காதது எழுதப்படாத விதி என்றும், அது “பொது அறிவு” என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

“கோட்பாட்டளவில், அன்வாருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த கட்சிகள் (அல்லது தனிநபர்கள்) ஒரு நாள் (கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை மீறாமல்) மற்றும் தங்கள் இடங்களை காலி செய்யாமல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம்.” இருப்பினும், அது நடக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.