கைப்பற்றப்பட்ட 100 கிலோ போதைப்பொருளை அழிக்க உத்தரவிட்ட கொழும்பு நீதிமன்றம்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) கைது செய்யப்பட்ட ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 107 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 01 கிலோகிராம் 104 கிராம் மற்றுமொரு பொருளை அழிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அக்டோபர் 12 ஆம் தேதி, குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இதன்படி நாளை புத்தளம் பாலவிய பிரதேசத்தில் குறித்த வழக்குப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

-an