யாழ்ப்பாணத்தில் 3 சிங்கள இராணுவத்தினர் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பகுதியில் மூன்று சிங்கள இராணுவப் படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி ஸ்ரீ முருகன் கோயிலுக்கு அருகாமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ படை வீரர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இடம்பெற்றதென இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவப் படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டு மோதல் காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சக இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய படை வீரரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர், சக படைவீரர்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் அப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.

TAGS: