தமிழருக்கு நீதி கேட்டு மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தின் உள்ள அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலைப்பாட்டை எட்ட வைத்துள்ள அதுவேளை தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக பல சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழகத்தின் சில கிராமங்களில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி வீடுகள் தோறும் கறுப்புக் கொடியினை பறக்க விட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரி ஆயிரக்கணக்கான மகக்ள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஒன்றுகூடினர்.

‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று பிற்பகல் மெரினா கடற்கரையில் பாண்டிய மன்னிடம் நீதிகேட்டு போராடிய கண்ணகி சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விடுதலை பறை அடித்து சிங்கள அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

TAGS: