சிலாங்கூரில் போலியான வாக்களர்களுக்கு எதிரான போருக்கு ரிம5 மில்லியன் செலவிடப்படும்

சிலாங்கூர் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு அதன் அரசு பணியாளர்களையும் கிராமத் தலைவர்களையும் உட்படுத்தும் ஒரு “சிலாங்கூர்கு பெர்சே” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

“இசி (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு” இத்திட்டம் உதவும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தேர்தல் ஆணையத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.