இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் 8 பேர் அடைப்பு

இலங்கை சிறையில், இந்தியாவைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் ரஜித் சேனாரத்னே தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து அமைச்சர் சேனாரத்னே குறிப்பிடுகையில், “இந்திய சிறைகளில் 36 இலங்கை மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் எட்டு பேர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க, தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

TAGS: