100-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பு

இலங்கையின் பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் மருத்துவ மனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் இராணுவ வீரர்கள் உட்கொண்ட உணவு விஷமானதன் காரணமாகவே இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 57 பேர் பனாகொட இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 பேர் நாராஹென்பிட்டி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய குறிப்பிட்டார்.

எனினும் உணவு விஷமானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

TAGS: