யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வைத்து இலங்கை விசேட அதிரடிப் படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப் படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்குரிய குழுவினரை கைது செய்வதற்காக சென்ற போதே படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு விசேட அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவரையும் யாழ்ப்பாணப் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

காயமடைந்த விசேட அதிரடிப்படை வீரர் யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS: