பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு.

அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். மரடோனா கேட்டது அந்தக் காவலருக்கு புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்த  மரடோனா உற்சாகமாகி அவரைக் இறுக்கி கட்டியணைத்துள்ளார்.

பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக் காவலருக்கு தூக்கிக் காட்டியுள்ளார் மரடோனா.

அந்த காவலரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் ‘பிரபாகரன்’!

உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை!

இன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 58-வது பிறந்த நாள்.  ஆனால் இதுவரை அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியதில்லை; மறாக அதற்கு அடுத்த நாள் வரும் நவம்பர் 27-ஆம் தேதியை மாவீரர்களின் நினைவுளாக பிரகடனப்படுத்தினார் பிரபாகரன்.