தமிழர்க்குத் தேவை தனித் “தமிழர் நாடு”

students_tamilnadu2தமிழர் நாட்டு  தன்மானமுள்ள  மாணவ மணிகளே , அன்பு தம்பிகளே , தங்கைகளே , மாணவ கண்மணிகளுக்கு ஆதரவாக களமிறங்கி நிற்கும் பெற்றோர்களே , பொதுமக்களே , உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள் !

அண்மைய செய்திகளின் வழி நாம் அறிவது காங்கிரசு அரசு தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இல்லை ! என்பதும் , அதனிலும் ஒருபடி மேலாக பா. சா.க கட்சியின் பிரதிநிதி சுசுமா சிவராசு, ” மற்ற நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ” என்று  கூறியிருப்பதில் இருந்து தமிழர்களாகிய நமக்கு அவர்கள் தெளிவான ஒரு செய்தியை பதிவு செய்து இருக்கிறார்கள் !

அதாவது , தமிழர்களை நாங்கள் மனிதர்களாகவே மதிக்கவில்லை!  இந்திய நாட்டின் குடிமக்கள் என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டாலும் , நாங்கள் தமிழர்களை இந்திய குடிமக்களாக எண்ணவில்லை ! தமிழர்கள் நாங்கள் தேர்தலுக்குப் பயன் படுத்திவிட்டு தூக்கி எறியும் எச்சில் இலைகளாகவே பார்க்கிறோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!

இரண்டு மலையாள மீனவர்கள் கொள்ளப்பட்டார்கள்  என்பதற்காக இத்தாலியுடன் மல்லுகட்டுகிறது இந்திய அரசு . ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள்  கொல்லப்பட்ட போதும், அன்றாடம் தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அடித்து நொறுக்கப்படும் போதும், சிங்களவன் எனது நண்பன்.  இலங்கை எங்கள் நட்பு நாடு என்று , உரக்கக் கூறுகிறது .

அன்பு மாணவ சகோதரர்களே, இந்தச்  சூழலில் நமக்குத் தெளிவாகப் புலப்படுவது ஒன்றுதான். தமிழினத்தின் விடுதலை என்பது இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகளின் கைகளில் இல்லை, அது உலகையே தமிழர் நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கும் உங்களின் கைகளில் தான் உள்ளது என்பது தான்   உண்மை !

தமிழீழ மக்களின்  துன்பத்திற்குக் தீர்வு “தனித் தமிழ் ஈழம் ” ஒன்றுதான் , இதில் மாற்றுக் கருத்தில்லை . அதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு வேண்டும்! எது அந்த நாடு ? இந்தியாவா ? நிச்சயமாக இல்லை என்பது நம் அனைவருக்கும்  தெரியும். உலகில் எந்த நாடும் இதற்காக களமிறங்காது. அதுவும் நமக்கெல்லாம் தெரியும். ஆகவேதான் காலம் நம்மை ஒரு இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது!

ஆம், நமது உரிமையை நாமே முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழர்க்கு என்று ஒரு தனி   நாட்டை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! அது இன்று “தமிழ் நாடு” என்ற பெயரில் வடவர்களின் ஆதிக்கத்தில் ஒடுக்கப் பட்டுக்கிடக்கிறது! தமிழ் நாடு, “தமிழர் நாடாக ” தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கின்ற , தன்னாட்சி பெற்ற தனி நாடாக மலர வேண்டும். அந்த தனித்துவம் மிக்க வரலாற்றை  , இன்றைய புரட்சிமிக்க மாணவ சமுதாயமாக இருக்கின்ற உங்களால் தான் உருவாக்க முடியும்.

இனியும் மானக்கெட்டு, இந்தியன் என்ற ஏளனச் சொல்லோடு இத்தாலி காரியின் காலடியில் வீழ்ந்துகிடக்க ஈனப் பிறவிகளல்ல எம் தமிழினம் என்று புயலெனப் புறப்படுங்கள். உலகமெங்கும் பரந்து வாழும் உங்களின் தொப்புள் கொடி உறவுகள் அந்த விடியலுக்காக , விழிகளிலே ஒளியேந்தி விழித்திருக்கிறோம்!

நாளைய தமிழினத்தை வழி நடத்துவதற்கு ஒப்பற்ற , ஆற்றல் மிக்க இளைய தளபதிகள் உங்களிடையே தான் இருக்கிறார்கள் என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!

தொடரட்டும் உங்கள் போரட்டங்கள் ! பிறக்கட்டும் “தனித் தமிழர் நாடு”, மலரட்டும் “தனித் தமிழ் ஈழம்”.

தமிழராய் ஒன்றிணைவோம் ! தரணியை வென்றிடுவோம்!

நம்பிக்கையுடன்
அர.எழிலன்
“நாம் தமிழர்” ஒருங்கிணைப்புக் குழு
மலேசியா

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272