லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய நபர் கைது

Lakshman_Kadirgamar_(1932-2005)முன்னாள்  இலங்கை வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பின் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட அவர், இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் சர்வதேச பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்தும், சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்யவதற்கான சிகப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அது குறித்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து அங்கு சென்ற இலங்கை அதிகாரிகள் சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர், தடுப்பு காவலில்  வைக்கப்பட்டுள்ளதுடன் விசேட பொலிஸ் குழு அவரிடம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

TAGS: