இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
சம்பந்தனுக்கு எதிரான சமர்!! மகிந்த ராஜபக்ச!
சம்பந்தனுக்கு எதிரான சமரை மகிந்த அணி கைவிடுகிறது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகப் பொது எதிரணியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பிற்போடுமாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது. தேசிய அரசுடன் கைகோர்த்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான…
சம்பந்தனின் நல்லெண்ணத்தை சிங்கள தேசம் புரிந்துக்கொள்ளவில்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக “சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற…
சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியில் இணைவதையே விரும்புகிறோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியுடன் வந்து இணைவதையே நாங்கள் விரும்புகின்றோம். எங்களுக்கு அவரிடம் கேட்பதற்கான உரிமையுமிருக்கிறது.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்…
இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா…
சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைகளத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட…
லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வுகளை முன்னுரிமை கொடுத்து உடனடியாக, மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வுகள் முடிய முன்னரே, சிறிலங்கா…
வடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக
வடக்கு மாகாணத்தில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். புதுவருடத்தினை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும்…
இன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய
“இன ரீதியில் பிளவுபட்டிருக்கும் நாடு ஒன்று சீர்குலைந்துவிடும். இவ்வாறான நாட்டிற்கு எதிர்காலம் என்பதே இல்லை.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். “உலகில் அபிவிருத்தி கண்ட அனைத்து நாடுகளும், அவ்வாறான அபிவிருத்தி நிலையை அடைந்தமை நாடுகளுக்கிடையே உள்ள இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பயன்படுத்தியே. எமது மத்தியிலுள்ள தேசிய பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வேண்டும்.”…
முள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்!
இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள். இதனை யாழ்.பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவர் ஒன்றியம் சிந்திக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர்…
கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா?
முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இரண்டு வாரங்கள் இந்தியாவில்…
ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்
“ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஈழத்தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இருவார கால விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அங்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். அவர்…
லண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்: திரண்ட தமிழர்களால் மத்திய…
இன்று லண்டன் மத்திய நகரமே அதிரும்படியாக தமிழர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். லண்டன் வந்துள்ள மைத்திரியை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். -athirvu.com
உலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய இலங்கை தமிழன்
ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள். அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா…
சர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு! – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன்…
அரசியல் தீர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டு அரசு தொடர்ந்தாலும், நெருக்கடியின்றி குழப்பமின்றி தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், சர்வதேசத்தை நாடும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது.…
திருகோணமலையில் உள்ள சோழர் காலத்து ஆலயத்திற்கு எதிர்கட்சித் தலைவரால் அடிக்கல்…
திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பரிபாலனத்தில் உள்ளதும், சோழப்பெரு மன்னர்களால் திருக்கோணேஸ்வரத்தின் ஏழு எல்லைக்காவல் தெய்வங்களில் ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்று பெருமை மிக்க பன்குளம், பறையன் குளம் அருள் மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நடும் விழா 18-04-2018 புதன்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட…
அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைக்கிறோம்: இரா.சம்பந்தன்
நாட்டை பிரிக்க முடியாதவாறு, அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், “எதிர்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக அவநம்பிக்கை…
காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி
வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது…
நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா
2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ள அமெரிக்க காங்கிரஸ், இந்த நிதியை சிறிலங்காவுக்கு வழங்குதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் நிறைவேற்ற…
இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்
கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான முட்டைகளை மணலுக்குள் இட்டுப் புதைத்துவிட்டு, அந்த முட்டைகளுக்குள் இருந்து முதலைக்குட்டிகள் வெளியில் வரும்…
பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு
கிளிநொச்சி, உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும்…
அமெரிக்க ஜனாதிபதியின் பார்வையில் சிக்கிய இலங்கை!
தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கையர்களுக்கு சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதுவருடாக அமையட்டும் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை வழங்க தான்…
சிறிலங்கா அரசில் புத்தரோ, காந்தியோ இல்லை- மனோ கணேசன்
சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “பலமான தமிழ் கட்சி உருவாவதை ஐக்கிய தேசிய கட்சி…
சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா…
புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு…
























